மதுரை எஸ்.பி அதிரடி : கஞ்சா விற்பனையாளரின் சொத்துக்கள் முடக்கம்
மதுரையில் கஞ்சா விற்பனையாளர்களின் 2 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்: எஸ்.பி சிவபிரசாந்த் மதுரை மாவட்டத்தில் செக்கானுரணியில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட முத்து என்பவரின் 1.1 கோடி மதிப்பிலான வீடு, இருச்சக்கர வாகனம் பறிமுதல்.
அதேபோல் மதுரை ஒத்தக்கடை 810 கிலோ கஞ்சா பறிமுதல் தொடர்பாக குணசேகரன் கைது செய்யப்பட்டர் இவர் மீது 8 வழக்குகள் தமிழகம் முழுவதும் நிலுவையிலும் உள்ளன. அவரின் 80 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்.
இரண்டு கஞ்சா வழக்குகளில் 2 கோடி மதிப்பிலான சொத்து சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளன. மதுரையில் இந்த ஆண்டில் 22 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். 198 பேரிடம் நன்னடத்தை பத்திரம் பெறப்பட்டு உள்ளன. அதனை மீறிய இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் 8 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 960 கிலோ கஞ்சா நீதிமன்ற அனுமதி பெற்று வருகின்ற அக்.17 தேதி திருச்சுழியில் இருக்கு தனியார் கம்பெனியில் அழிக்கப்பட உள்ளன. தொடர் கஞ்சா தடுப்பு நடவடிக்கைகளால் மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை குறைந்து உள்ளது