நித்தியானந்தாவிடம் விருது வாங்கிய திருச்சி சூர்யா
பாலியல் வழக்குகளிலும், பல சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் “நித்தியானந்தா”. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு “கைலாசா” என்ற நாட்டை உருவாக்கினார். இச்சம்பவம் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனான திருச்சி சூர்யாவிற்கு கைலாசாவின் தர்மரட்சகர் விருது கொடுத்து சிறப்பித்திருக்கிறார், நித்தியானந்தா.
திமுகவின் முன்னணி தலைவராக விளங்கும் திருச்சி சிவாவின் மகன் சூர்யா கடந்த மே மாதம் பாஜகவில் இணைந்தார். பாஜகவிற்கு மாறியதிலிருந்து திமுகவை கடுமையாக சாடி வருகிறார். பாஜக ஓபிசி பிரிவின் மாநில பொதுச்செயலாளர் பொறுப்பு வகிக்கும் சூர்யா சிவாவிற்கு கைலாசாவின் தர்மரட்சகர் விருது கொடுத்து சிறப்பித்திருக்கிறார் நித்தியானந்தா. ஆன்லைனில் நடைபெற்ற இவ்விழாவில் திருச்சி சிவா பேசியது, “நான் தீவிர அண்ணாமலை சிவ பக்தன்.அதன் காரணமாக தான் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு கீழ் வேலை செய்யும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். நான் இந்த விருதை வாங்கியதில் மிகவும் பெருமையடைகிறேன்.” என்று கூறியுள்ளார்.