அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆந்திர கடலோரப் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் இன்று கன முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை வெளியேறி வரும் நிலையில், பருவமழையை தீவிரப்படுத்தும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்தது. இது மெல்ல வலுவிழந்து ஆந்திர கடலோர பகுதியை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நேற்று முதல் நிலவி வருகிறது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 09 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் எனவும், இன்றைய தினம் இதன் காரணமாக தமிழ்நாட்டில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழ்நாடு மாவட்டங்கள், வட தடமிழ்நாடு உள் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *