கெட்டுபோன உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் பலி; 11 பேருக்கு தீவிர சிகிச்சை!

திருப்பூர் அருகே விடுதியில் கெட்டுப்போன உணவு உண்ட 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அவிநாசி சாலை பூண்டி ரிங்ரோட்டில் உள்ள விவேகானந்தா சேவாலயம் ஆதரவு எற்போர் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உண்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பாபு, அத்தீஸ், மாதேஸ் ஆகிய 3 சிறுவர்கள் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருடுதியில் தங்கியுள்ள சிறுவர்களுக்கு கெட்டுப்போன உணவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைச் சாப்பிட்ட மாணவர்களில் 10 வயது முதல் 13 வயது வரையுள்ள 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கல் வெளியாகினது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு பாதுகாப்பு, வருவாய் துறை, காவல்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியிருக்கின்ற நிலையில் தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆதரவற்றோர் இல்லம் முன்பாக ஏராளமானோர் திரண்டுள்ளதால் பாதுகாப்புக்காக காவல் துறையினர் குவிக்கப்படுள்ளனர்.

ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த 15 பேரில் ஒருவர் சொந்த ஊருக்கு சென்றுள்ள நிலையில், மீதமுள்ள 11 பேருக்கு அங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *