பேச்சுவார்த்தை தொடர் தோல்வி சுங்கசாவடி பணியாளர்களின் அடுத்த ‘மூவ்’ ?
சுங்கசாவடி பணியாளர்களின் பணிநீக்கம் தொடர்பாக பாண்டிச்சேரியில் இன்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி.
முடிவு எடுக்கும் அதிகாரம் தனக்கில்லை என்ன்பதால் இந்த பேச்சுவார்த்தை தொடர்பான கோப்புகளை டெல்லியிலுள்ள உயரதிகாரிகளுக்கு அனுப்ப உள்ளதாக கூறி தொழிலாளர் நல உதவி ஆணையர் ரமேஷ்குமார் பேச்சுவார்த்தையை முடித்து கொண்டதாக தகவல்.
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் சுங்கசாவடி நிர்வாகத்தினருடன் நேற்று முன்தினம் மத்திய தொழிலாளர் நல உதவி ஆணையர் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்ட படாத நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது.
மாலை 4 மணி வரை 6 மணிநேரமாக இரு தரப்பினரிடமும் மூன்று சுற்றுகள்நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என தெரிகிறது. தொடர்ந்து சுங்கசாவடி (TTPL) நிறுவனம் நீர்மன்றம் வாயிலாக தீர்வு கண்டுகொள்வதாக கூறி பேச்சுவார்த்தையில் இறங்கி வர மறுப்பதால்
இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என தெரிவித்துள்ள, ஒன்றிய தொழிலாளர் நல உதவி ஆணையர் ரமேஷ்குமார் பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கை மற்றும் TTPL நிர்வாக தரப்பினர் கொடுத்துள்ள பதில்கள் அடங்கிய கோப்புகளை டெல்லியிலுள்ள தொழிலாளர் நல அலுவலக உயரதிகாரிகளுக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்து பேச்சுவார்த்தையை முத்துக்கொண்டுள்ளார்.
முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடர்பான கோப்பில் TTPL நிறுவன நிர்வாகிகள் மட்டுமே ஒப்புதல் கையெழுத்திட்டுள்ள நிலையில் சுங்கப் பணியாளர்களின் தொழிற்சங்க நிர்வாகிகள் கையெழுத்திடவில்லை என தெரிகிறது.