மது பாட்டிலில் போதை மாத்திரையை கலந்து விற்பனை செய்த நபர் கைது

ராமேஸ்வரத்தில் மது பாட்டிலில் போதை மாத்திரையை கலந்து விற்பனை செய்த நபர் கைது, போலீசார் நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வேர்க்கோடு அடுத்த கரையூர் பகுதியைச் சேர்ந்த குமரகுரு என்பவர் டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி அதில் அட்ரோபின் எனப்படும் அதிக போதையை தரக்கூடிய மாத்திரையை கலந்து அதிக விலைக்கு விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக துறைமுக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது

இதையடுத்து குமரகுரு என்பவர் மது பாட்டிலில் போதை மாத்திரை கலந்து விற்பனை ஈடுபட்டபோது போலீசார் கையும் களமாக பிடித்து கைது செய்து அவரிடம் இருந்து 50 மது பாட்டில் ஒரு இருசக்கர வாகனத்தினை பறிமுதல் செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *