கொசு மருந்து இயந்திரத்தில் திடீர் தீ விபத்து சுகாதாரப்பணியாளர் பரிதாப பலி, அமைச்சர் நேரில் அஞ்சலி

விக்கிரவாண்டி அருகே கொசு மருந்து அடிக்கும்போது ஏற்பட்ட தீ விபத்தில் காயம்பட்டு உயிரிழந்த ஒப்பந்த ஊழியர்  குடும்பத்தினருக்கு அமைச்சர் பொன்முடி நேரில் சென்று ஆறுதல் கூறி அரசு மற்றும் கட்சி சார்பில் 2 லட்சத்திற்கான நிதி உதவியை வழங்கினார் அவர் மனைவிக்கு அரசு வேலை வழங்கவும் உறுதி 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, அருகே உள்ள ராதாபுரம் ஊராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த கோவிந்தன் கடந்த வாரம் ஊராட்சியில் கொசு மருந்து அடிக்கும் போது இயந்திரத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் காயம் அடைந்த கோவிந்தன் விழுப்புரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி  கோவிந்தன் உயிரிழந்தார்

இந்நிலையில் இன்று காலை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி ஆகியோர் நேரில் சென்று கோவிந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி முதல்வர் நிவாரண நிதியில் இருந்து முதற்கட்டமாக ஒரு லட்சமும், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் ஒரு லட்சமும் என இரண்டு லட்சத்தினை அவர் குடும்பத்தினரிடம் அமைச்சர் பொன்முடி வழங்கினார்

பின்னர் பேசிய அமைச்சர்  பொன்முடி ,மறைந்த கோவிந்தன் மனைவிக்கு ராதாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி வழங்கப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி உறுதி அளித்தார்.

நேற்று மாலை சடலத்துடன் ஒப்பந்த ஊழியரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *