‘ஸ்டெர்லைட்டால் இதுதான் நடக்கும்’ நிரூபித்த விவசாயிகள், ஆலையை நிரந்தரமாக மூட கோரிக்கை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்த பொழுது ஆலைக்கு தண்ணீர் எடுப்பதால் ஒருபோகம் மட்டுமே விவசாயம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஆலை மூடியபின் இரண்டு போக விவசாயம் நடைபெறுவதால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதிக்க கூடாது என்று தூத்துக்குடியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்     

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஆட்சியர் செந்தில் ராஜ தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட கடம்பா குளம் பாசன விவசாயிகள் – ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்த பொழுது கடம்பா குளத்தில் இருந்து அதிக அளவில் ஆலைக்கு தண்ணீர் எடுப்பதால் தாங்கள் ஒரு போகம் மட்டுமே விவசாயம் செய்ய முடிந்ததாகவும் தற்பொழுது ஆலை மூடிய பின் இரண்டு போகம் விவசாயம் செய்ய முடிகிறது என்றும் தெரிவித்துள்ளனர் 

எனவே ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் எக்காரணம் கொண்டும்அனுமதி வழங்கக் கூடாது என்று கடம்பா குளம் பாசன விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *