ஓடும் ரயில் செல்போன் பறிக்க முயற்சி…திருடனுக்கு நூதன தண்டனை!!

பீகார் மாநிலம் பாகல்பூரில் பயணிகள் ரயில் ஒன்றில் ஜன்னல் வழியாக கொள்ளையடிக்க முயன்ற போது நூதன தண்டனை கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பீகாரில் ஜமால்பூர் – சாஹிப்கஞ்ச் பயணிகள் ரயிலில் லைலாக் மற்றும் கோகா ஆகிய நிலையங்களுக்கு இடையே ஒரு திருடன் ஜன்னல் வழியேசெல்போனை திருட முயன்றபோது பிடிபட்டு, உயிருக்குக் கெஞ்சும் வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் பீகார் மாநிலத்தில்ஓடும் ரயிலில் பயணிகளிடம் இருந்து செல்போன் பறிக்க முயற்சி செய்த ஒரு நபரைக் கையும் களவுமாகப் பிடித்தனர். பின்னர் ரயில் பெட்டிக்குள் இருந்தபடி, திருடனின் கையைப் பிடித்து, சுமார் 15 கிமீ தூரம் அவரை தொங்கியபடியே இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அந்த வகையில் இதேபோன்று மற்றொரு திருடமுயன்று தோல்வியுற்ற கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. ஜமால்பூர் – சாஹிப்கஞ்ச் பயணிகள் ரயிலில் லைலாக் மற்றும் கோகா ஆகிய நிலையங்களுக்கு இடையே ஒரு திருடன் ஜன்னல் வழியே செல்போனை திருட முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது பயணிகள் அவரைப் பிடித்தனர். ஜன்னில் தொங்கியபடி, தன்னை விடும்படி, திருடன் கெஞ்சினார். அதன்பின், அவரை உள்ளே இழுத்து, பயணிகள் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *