தாபா உணவகத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள், காவல்துறை அதிரடி
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் மூன்று கார்களில் கடத்தி வந்த 633 கிலோ குட்கா போதைப் பொருட்களை சங்ககிரி போலீசார் பறிமுதல் செய்தனர் தப்பியோடிய குற்றவாளிகளுக்கு போலிசார் வலைவீச்சு
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள வைகுந்தம் சுங்கச்சாவடி வழியாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போதை பொருட்களை சிலர் காரில் கடத்தி செல்வதாக சங்ககிரி காவல்துறை ஆய்வாளர் தேவிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறை ஆய்வாளர் தேவி தலைமையிலான குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்
வைகுந்தம் பகுதியிலுள்ள ராஜஸ்தானி தாபா உணவு விடுதியில் சந்தேகத்திற்க்கிடமாக நிறுத்தியிருந்த மூன்று கார்களை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட 633 கிலோ போதை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்து உடனடியாக மூன்று கார்கள் மற்றும் 633 கிலோ போதை பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார் உணவு விடுதியில் விசாரணை மேற்கொண்டபோது சொகுசு காரில் வந்தவர்கள் தப்பி சென்றதாக கூறியுள்ளனர்.
மேலும் இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து உணவு விடுதியில் பணியாற்றி வரும் பணியாளர்களிடம் போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சங்ககிரிஅருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.