ஓய்வை அறிவித்த டென்னிஸ் வீரர் பெடரர்..!! கண்கலங்கிய நடால்..!!

பெடரர், லாவர் கோப்பை டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெற்றார். அவர் தனது கடைசி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலுடன் இணைந்து இரட்டையர் ஆட்டத்தில் விளையாடினார். இந்த ஆட்டம் நேற்று நடைபெற்றது.

பெடரர் இணை, எதிரணியுடன் தோல்வியைத் தழுவியது. ஆட்டம் முடிந்த பிறகு, அரங்கத்தில் அமர்ந்திருந்தபோது பெடரர் இந்த ஆட்டத்திற்கு பிறகு விளையாட போவதில்லை என்பதால் கண்கலங்கினார்.

இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. பெடரரும் கண்கலங்கினார். இவர் இருவரும் எதிரெதிராக 40 ஆட்டங்களில் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடால் 22 முறையும், பெடரர் 20 தடவையும் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றனர். எதிரெதிர் துருவங்களாக இருந்த போதிலும் இருவரும் கண் கலங்கியது கண்ட டென்னிஸ் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தது. 

இந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பகிர்ந்தார்.அத்துடன் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். இதற்கிடையில், ஃபெடரரின் ஓய்வுடன் வாழ்க்கையில் ஒரு முக்கிய பகுதி வெளியேறியதாக கருதுகிறேன் என்று நடால் தெரிவித்தார்.

எங்கள் விளையாட்டின் வரலாற்றின் இந்த அற்புதமான தருணத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நினைத்து நான் கெளரவமாக கருதுகிறேன் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *