நிம்மதியை இழந்த ஆட்டோ ஓட்டுநர்..!!  ரூ.25 கோடி பரிசு தொகை பெற்றது குற்றமா என கேள்வி..!!  

கேரளாவில் திருவோண பம்பர் பரிசு தொகை ரூ.25 கோடி பெற்ற ஆட்டோ ஓட்டுநர் நிம்மதி போய்விட்டது என பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.  மேலும் அவர் கூறுகையில் நிம்மதி இழந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், மக்கள் பண உதவி கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்வதாகவும் கண்ணீர் மல்க வெளியிட்டார். 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஸ்ரீவராகத்தை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனுப் இவர் குடும்ப வறுமை காரணமாக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் திருவோண பம்பர் பரிசு சீட்டை பழவங்காடி பகுதியில் உள்ள பகவதி லாட்டரி ஏஜென்சி கடையில் இருந்து வாங்கியுள்ளார்.

லாட்டரி எடுக்கப்பட்டு ஒரே நாளில் அனுப்க்கு ரூ.25 கோடி பம்பர் பரிசு தொகை அடித்தது. வரி சலுகை போக 15.75 கிடைக்கும் லாட்டரி நிர்வாகம் தெரிவித்தன. 

இதனால் ஒரே நாளில் மகிழ்ச்சியாக வாழ்க்கையே மாறிய நிலையில் அனுப் தற்போது நிம்மதி இழந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக வீடியோ வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரையிலும் வங்கி கணக்கில் பணம் வராத நிலையில் உறவினர்கள், மக்கள் பண உதவி கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்வதாகவும், ஆனால் தன் குழந்தைக்கு சுகமில்லாத நிலையில் மருந்து கூட வாங்க செல்ல முடியாத நிலையில் தன் வீட்டை விட்டு வெளியேறி தன் அக்கா வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் கூறி கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *