‘குறவர்’ என்ற பெயரை நீக்க திடீர் சாலை மறியல் போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில்  நரிக்குறவர் நல வாரியம் என்ற பெயரில் குறவர் என்ற பெயரை நீக்க வலியுறுத்தி வனவேங்கைகள் கட்சி சார்பில் ஆத்து கடை சந்திப்பில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்…

வட மாநில நக்கலே என்ற மக்களுக்கு மத்திய, மாநில அரசிதழில் மற்றும் எம்பிசி பட்டியலில் நரிக் குறவர்கள் என்ற வார்த்தையை சூட்டியுள்ளதாகவும் அந்தப் பெயரை திருத்தம் செய்ய வேண்டும் எனவும் நரிக்குறவர் நல வாரியம் என்ற வாரிய பெயரிலுள்ள குறவர் என்ற சொல்லை நீக்க கோரியும் வனவேங்கைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

இந்நிலையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆத்துக் கடை பகுதியில் திடீர் மறியல் போராட்டம் நடைபெற்றது மறியலில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர் திடீர் மறியல் போராட்டம் காரணமாக மதுரை  ரோடு மம்சாபுரம்  ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது 

மறியல் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நகர் காவல் நிலைய போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை  பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் மறியலில் ஈடுபட்ட 30 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்   இந்த போராட்டத்தில் வனவேங்கைகள் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *