திருமணமான 7 மாதத்தில் கர்ப்பிணி இளம் பெண் எடுத்த விபரீத முடிவு; விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!

கும்பகோணத்தில் திருமணமாகி 7 மாதத்தில் இளம்பெண் அபிநயா (21) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறையைச் சேர்ந்த அபிநயாவிற்கும், கும்பகோணத்தை சேர்ந்த சரவணனுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் கும்பகோணத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.
அபிநயா தனது கணவர் வீட்டில் வசித்த நிலையில் நேற்று தூக்கிட்டு கொண்டதாகவும், கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் வைத்திருப்பதாகவும் சரவணன் பெண்ணின் தாய், தந்தையரிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

பெண்ணின் பெற்றோர்கள் கும்பகோணத்திற்கு வந்து பார்த்தபோது அபிநயா மருத்துவமனைக்கு வரும்போது இறந்து விட்டதாகவும் ,அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக பிணவறையில் வைத்திருப்பதாக மருத்துவமனையில் தகவல் தெரிவித்துள்ளனர் .

இதனை தொடர்ந்து தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் பெண்ணின் தந்தை ராமச்சந்திரன் புகார் கொடுத்துள்ளார்.

இப் புகாரில் பெண்ணின் கணவர் சரவணன், அவரது பெற்றோர்கள் மற்றும் சகோதரர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கும்பகோணம் காவல் நிலையத்தார் சந்தேகம் மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருமணமாகி ஏழு மாதமே ஆகும் நிலையில் இப்ப பெண்ணின் மரணம் குறித்து கும்பகோணம் கோட்டாட்சியர் விசாரணை நடத்துவார் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இறந்த அபிநயா தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார் என உறவினர்கள் சோகத்துடன் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இதனிடையே இறந்த அபிநயா வின் கணவர் சரவணன் மது போதையில் வீட்டிலிருந்து கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *