ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி; மனநலம் பாதிக்கப்பட்டவரை பராமரித்து வந்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

புதுக்கோட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபரைக் பராமரித்து வந்த பெண், அவராலேயே பட்டப்பகலில் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வைத்திக்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலன். இவரது மனைவி மாரிகண்ணு (55). மாரிக்கண்ணுவின் பெரியப்பா கருப்பையா என்பவரது மகன் குணசேகரன்(45). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இவரை வைத்திக்கோவில் பகுதியில் மாரிகண்ணுவின் வீட்டு அருகே தனியாக உள்ள வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் குணசேகரனுக்கு தினசரி மாரிகண்ணு உணவு உள்ளிட்டவைளை கொடுத்து பராமரித்து வந்துள்ளார்.

மாரிக்கண்ணுவை தவிர வேறு யாரும் குணசேகரன் தங்கி இருக்கும் வீட்டிற்கு செல்ல மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மாரிக்கண்ணு அந்தப் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று விட்டு அவரது வீட்டை நோக்கி சென்ற போது குணசேகரன் தங்கி உள்ள வீட்டை கடந்துள்ளார். அப்போது குணசேகரன் திடீரென அவர் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மாரிக்கண்ணுவை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

பின்னர் இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற உடையாளிபட்டி காவல்துறையினர் மாரிக்கண்ணுவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மாரிக்கண்ணுவை குணசேகரன் தான் கொலை செய்தார் என்பது தெரிய வந்ததே தொடர்ந்து அவரை தேடிச் சென்றபோது குணசேகரன் ஒரு பேருந்து ஏறி தப்ப முயன்ற போது அவரை கீரனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் யோகரத்தினம் விரட்டி பிடித்து கைது செய்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

தற்போது குணசேகரனிடம் விசாரணை நடைபெற்று வரக்கூடிய நிலையில் மாரிக்கண்ணுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உணவு கொடுத்து பராமரித்து வந்த உறவுக்கார பெண்ணை மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபர் ஒருவர் பட்டப் பகலில் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *