300 கிலோ வெயிட்டு… ரீல் பாகுபலிக்கு டப் கொடுக்கும் வாலிபர்!!
நாம் அன்றாட பயன்படுத்தும் இணையத்தில் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே இணையத்தில் வைரலாகுவது உண்டு. அந்த வகையில் கேரள மாநிலம் அடுத்த இடுக்கி பகுதியில் ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதத்தில் ஒரு போட்டி நடந்ததாக கூறப்படுகிறது.
அதன் படி பிரதீஷ் என்ற இளைஞர் சுமார் 300 கிலோ எடையுள்ள மரக்கட்டை ஒன்றை தோளில் தூக்கி செல்லும் காட்சியானது இணைய வாசிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
குறிப்பாக தோளில் சுமந்து சென்றது மட்டுமல்லாமல் சுமார் 73 மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனைப்பார்த்து வியந்து போன அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள்
இளைஞருக்கு உற்சாகப்படுத்தும் வகையில் ஊக்கமளித்துள்ளனர். அதோடு மரக்கட்டையை சாலையில் போட்டதும் ஒட்டுமொத்த மக்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம் பல நெட்டிசன்களும் பாகுபலி படத்தில் மிகப் பெரிய சிலையை பிரபாஸ் தூக்கிக் கொண்டு போவது போல காட்சி அமைந்துள்ளதாகவும், சினிமாவில் மட்டும் நடக்கும் இத்தகைய செயலானது நிஜத்திலும் நடந்துள்ளதை பார்த்து திக்குமுக்காடியுள்ளனர்.
அதோடு மரக்கட்டையை தூக்கி அசத்திய இளைஞரை “கேரளாவின் பாகுபலி” என்றும் அந்த நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். பலப்பேரோ இது போன்ற முயற்சிகளை செய்ய வேண்டாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.