தந்தை பெரியார் உணவகத்தை அடித்து நொருக்கி இந்து அமைப்பினர் அராஜகம்

கோவை காரமடை கண்ணார்பாளையத்தில் தந்தை பெரியார் உணவகம் என பெயர் பலகை வைத்ததால் ஆத்திரம் – இன்று திறக்கவிருந்த கடையை இந்து அமைப்பினர் தாக்கி உடைத்ததால் பரபரப்பு.

கோவை காரமடை கண்ணார்பாளையம் பகுதியில் பிரபாகரன் என்பவர், அருண் என்பவருக்கு புதிதாக உணவகம் வைத்து கொடுத்துள்ளார். இந்த உணவகத்திற்கு அருண் தந்தை பெரியார் உணவகம் என பெயர் சூட்டி பெயர் பலகை வைத்துள்ளார்.

இன்று உணவகம் திறக்க இருந்த நிலையில் நேற்று இரவு கடைக்கு வந்த மர்ம நபர்கள் தாங்கள் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் எனக் கூறி, இந்த பகுதி இந்து அமைப்பின் கோட்டை எனவும், இங்கு பெரியார் பெயரில் உணவகம் வைக்க கூடாது என தெரிவித்து கடையை அடித்து நொருக்கியுள்ளனர்.

மேலும் அருணை சராமாரியாக தாக்கியதில் 36 தையல் காயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக காரமடை போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *