மதுபாட்டிலில் சரக்குடன் பாம்பு: குடிமகன்கள் அதிர்ச்சி!!
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பொன்னூரில் மது பாட்டில் ஒன்றில் பாம்பு ஒன்று இருந்ததாக இந்த சம்பவம் நடந்துள்ளது. பாட்டில் ஒன்றில் பேருந்து நிலையம் அருகே அரசு நடத்தும் மதுபானக் கடையில் சிலர் மது பாட்டில்களைவாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மது பாட்டிலில் செத்த பாம்பு இருப்பதை பார்த்த கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதன் காரணமாக பாட்டிலை மாற்றுமாறு கடை உரிமையாளர்களிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அங்கு பிரச்சனை வெடித்தது. அப்போது முதலில் மது பாட்டிலை மாற்ற மறுத்த கடை உரிமையாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். பின்னர்
மது பாட்டிலை மாற்றி கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இத்தகைய சம்பவம் குறித்த வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதோடு நெட்டிசன்கள் பலரும் கடும் விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர்.