வைரல்: ‘திருமணத்திற்கு பின்பும் கிரிக்கெட் விளையாட’ மணபெண்ணிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய மணமகன்…
மணப்பெண்ணிடம் ஒப்பந்தம் போட்டு திருமணத்தை அதிர வைத்த மணமகனின் நண்பர்கள். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூரைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்பவருக்கும், தேனியைச் சேர்ந்த பூஜா என்பவருக்கும் நேற்று உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
கிரிக்கெட் அணியின் கேப்டனான மணமகனுடைய அணியைச் சேர்ந்த அவர்களது நண்பர்கள் திருமணத்திற்கு பின்னும் கிரிக்கெட் விளையாட மணமகனுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மணமகள் சம்மதம் தெரிவிப்பது போன்று 20 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் போட்டு கையெழுத்து வாங்கிய சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணமகனின் நண்பர்கள் மணமகளிடம் பெற்ற ஒப்பந்த ( சம்மதபத்திரம் ) சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.