ஒரே நேரத்தில் மூன்று வெவ்வேறு துறைகளில் வேலை செய்யும் நபர் …. எப்படி தெரியுமா?

உலக மக்களிடையே தமிழர்கள் மட்டும் சற்று தனித்தே தெரிவார்கள் என்பதற்கு உதாரணமாகச் சென்னையில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

சுவேதா சங்கர் என்ற பெண் ரேபிடோ(Rapido பைக் டாக்ஸி) ஆப் மூலம் இரு சக்கர வாகனத்தில் சவாரி செய்ய முன்பதிவு செய்திருந்தார். அவர் முன்பதிவு செய்திருந்த ரேபிடோ டிரைவர் வந்தபோது, ​​​​ஓட்டுநர் அணிந்திருந்த சீருடையை பார்த்து சுவேதா அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். ஓட்டுநர் ஸ்விக்கி சீருடையை அணிந்து கொண்டு, டன்சோ பையை எடுத்துக் கொண்டு வந்திருந்தார். இதனை பார்த்த சுவேதா ஆச்சரியமடைந்துள்ளார். “ஸ்விக்கி” உணவுகளை டெலிவரி செய்யும் நிறுவனம், அதேபோல “டன்சோ” உணவு, மளிகை பொருட்கள் போன்றவற்றை டெலிவரி செய்யும் நிறுவனம். மூன்று நிறுவனமும் வெவ்வேறு என்றாலும் வேலை ஒன்றுதான் என்று எளிமையாக மக்களுக்கு புரிய வைத்துள்ளார் அந்த ஓட்டுநர்.

இதுகுறித்து சுவேதா தந்து லிங்கிடு இன் சமூக வலைத்தளத்தில் தெரிவித்தது, “நேற்று ரேபிடோவில் சவாரி செய்தேன். ஓட்டுநர் அண்ணா ஸ்விக்கி சீருடை அணிந்து டன்ஸோ பையை ஏந்தியிருப்பதைப் பார்த்தேன். அவர் ஒரே நேரத்தில் மூன்று வெவ்வேறு இந்திய ஸ்டார்ட்-அப்களில் வேலை செய்கிறார். இதனை பார்க்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *