கைலாசாவின் கடவுளுக்கே காய்ச்சலா..!! என்ன செய்ய போகிறது இலங்கை..?
இந்தியாவை விட்டு தப்பியோடிய நித்யானந்தா கைலாசா நாட்டை உருவாக்கி அதற்கு அதிபரே நான்தான் என்று அறிவித்திருந்தார். கைலாசாவுக்கு தனி நாணயம், விசா என அனைத்தையும் அறிமுகம் செய்ததோடு அவ்வப்போது வீடியோ வெளியிட்டும் காண்போரை அசர செய்திருக்கிறார்.
மேலும் கைலாசாவில் தொழில் தொடங்கவும், அங்கு சென்று வாழவும் விருப்பம் தெரிவிப்பவர்கள் தாராளமாக வரலாம் என அறிவித்தார். இப்படி வாழ்ந்தவர் கைலாசாவில் இருக்கும் நித்யானந்தாவின்
உடல்நிலை சரியில்லாததால் அவருக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்க உதவுமாறு இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த கடிதத்தில் நித்யானந்தாவின் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளது. உடனடியாக அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். கைலாசாவில் போதுமான மருத்துவ வசதி இல்லாததால் அவரது உடல் நலத்திற்கு என்ன நேர்ந்தது என கண்டறிய முடியவில்லை. அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு நித்யானந்தாவிற்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்க வேண்டும்.
நித்யானந்தாவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அரசியல் புகலிடமாக பாதுகாப்பை உறுதி செய்வதோடு, மருத்துவ உதவியும் வழங்க வேண்டும். அவரது மருத்துவ சிகிச்சைக்கு தேவையான அனைத்து செலவுகளையும் கைலாசா அரசே ஏற்றுக்கொள்ளும். நித்யானந்தாவுக்கு பாதுகாப்பான இடமும், மருத்துவ உதவியும் மட்டும் கொடுத்தால் போதும் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் காட்டுத்தீ போல் பதவி வருகிறது.