பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு போதைப்பழக்கமே முக்கிய காரணம் – அன்புமணி ராமதாஸ்  

கடந்த ஜூலை  2-ஆம் தேதி தேனீ மாவட்டம் எரசக்கநாயனூரில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவனை எதிர்த்ததால், 7 வயது சிறுமியை  தீயிட்டு எரிக்கப்பட்ட கொடூரம் நடந்தது. 65 க்கும் மேற்பட்ட தீக்காயங்களுடன் அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்துள்ளார். இதற்கு கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளார் அன்புமணி ராமதாஸ். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளதாவது, ”7 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட பாலியல் சீண்டலுக்கும்,  ஒரு மாதமாக துடிதுடித்து இப்போது உயிரிழந்திருப்பதற்கும் காரணம், அந்த சிறுமியை சிதைக்க முயன்ற கொடியவன் கஞ்சா போதையில் இருந்தது தான். பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு போதைப்பழக்கம் முக்கிய காரணமாகும். பாலியல் குற்றங்களைளை செய்தால் தண்டனை பெறாமல் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் நிலவுவது தான் குற்றங்கள் பெருகுவதற்கு இன்னொரு காரணம் ஆகும். பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் கடுமையான தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்ற  அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்.பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்கவும், பாலியல் குற்ற வழக்குகளில் 100 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும்”. இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *