பாம்பை கடித்து கொன்ற சிறுமி! பின்னணி என்ன?

தன்னைக் கடித்த பாம்பை, கோபத்தில் திரும்பக் கடித்துக் கொன்று அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுமியில் செயலானது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கந்தார் என்ற கிராமத்தில் மெஹ்மத் எர்கான் என்பவருக்கு மெஹ்மத் எர்கான் என்ற 2 வயது பெண்குழந்தை இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்டு 10ம் தேதி சிறுமி தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்தப்போது அலறல் சத்தம் கேட்டது.

இதனால் அப்பகுதி மக்கள் திரண்டு பார்த்தபோது இரண்டு வயது சிறுமியின் வாயில் அரை மீட்டர் நீளமுள்ள பாம்பு ஒன்று கவ்வி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதோடு சிறுமியின் கீழ் உதட்டில் பாம்பு தீண்டிய அடையாளமும் இருந்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக சிறுமியை மீட்டு அருகாமையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றனர். உரிய சிகிச்சைக்கு பின்னர் சிறுமி காப்பாற்றப்பட்டதாகவும், அவரது உடல்நிலை தேறி வருவதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *