சென்னை உணவுத் திருவிழா : பீஃப் பிரியாணிக்கு அனுமதி

தமிழ்நாடு சுகதாரத்துரை சார்பில் சென்னை தீவுத்திடலில் ‘சிங்கார சென்னையில் உணவுத் திருவிழா 2022” என்ற பெயரில் உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. பாரம்பரிய உணவு வகைகளை பிரபலப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் பீஃப் உணவுகளுக்கு தடை விதிக்க்கபட்டியிருந்தது. இந்த தடைக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நான் கூட பீஃப் பிரியாணி சாப்பிடுவேன், உணவு என்பது தனி மனித உரிமை. பீஃப் பிரியாணி அரங்கம் அமைக்கக் கடை உரிமையாளர்கள் கேட்டிருந்தால் அனுமதி வழங்கி இருப்போம்” என்று கூறியிருந்தார். இந்த விளக்கம் போதுமானதாக இல்லை என்று சமுக வலைத்தளத்தில் நெட்சன்கக்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று முதல் பீஃப் உணவுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுக்குபாய் பிரியாணி அரங்கில் பீஃப் பிரியாணி விற்பனை செய்யப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *