அதிர்ச்சி தந்த பேடிஎம் செயலி..!! விளக்கம் அளித்த பேடிஎம் நிர்வாகம்.!!
இன்றைய கால சூழ்நிலையில் அனைத்து இடங்களிலும் அனைத்து வகையான சிறு, பெரு பண பரிமாற்றத்திற்கு ஆன்லைன் வழியாக பணம் பரிமாற்றம் இருந்து வருகிறது. இந்நிலையில் பேடிஎம் கட்டண செயலி செயல்படாமல் இருந்த நிலையில் பயன்பாட்டாளர்கள் பெரிய இன்னல்களை சந்தித்து வந்தனர்.
இது குறித்து விளக்கம் அளித்த பேடிஎம் நிர்வாகம் இந்த சிக்கல் விரைவில் கண்டறிந்து இந்த பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளது. நேற்று இரவில் இருந்து இன்று வரை பல பயன்பாட்டாளர்களுக்கு பேடிஎம் செயலி செயல்படாமல் போனது.
செயலியை லாக்-இன் செய்து உள்ளே போனால் தானாக லாக்-அவுட் ஆவதும், பணம் பரிமாற்றம் செய்ய சர்வர் செயலிழப்பு என வருவதுமாக இருந்தது.
இதனால் பல பயன்பாட்டாளர்கள் இன்னல்களுக்கு ஆளான நிலையில் பல பயன்பாட்டாளர்கள் பிரச்சனை இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும் என்று பேடிஎம் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.