போரில் மலர்ந்த காதல்..!!  இனி உன்னை பிரிய மாட்டேன், துளி தூரம் நகர மாட்டேன்..!!

காதலுக்கு கண்கள் இல்லமானே  என்னும் கார்த்தி பாடல் பாடிவர்கள் வாரணம்  ஆயிரம் படத்திற்கு பிறகு காதலுக்கு எல்லை இல்லை என நிரூபித்து வருகின்றனர். அதை நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது சில சம்பவம் நடைபெறும் அதை நாம் பிரமிப்பாக பார்ப்பதை தாண்டி இது போன்ற சம்பவம் நமக்கு எப்போது நம் வாழ்க்கையில்  நடக்கும் என எதிர்பார்ப்போம்.  

அந்த வகையில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த செர்ஜி நோவிகோவ் என்பவர் தனது உக்ரைன் காதலி எலோனா பிரமோகாவை  ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கு இடையே கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் மோதலுக்கு இடையே, ரஷ்யா மற்றும் உக்ரைனைச் சேர்ந்த இளம் ஜோடி ஹிமாச்சல பிரதேசத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். 

உக்ரைனில் வசித்து வந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த செர்ஜி நோவிசோக் என்பவர் தனது காதலியான எலோனா பிரமோகாவை இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள திவ்யா ஆசிரம கரோட்டாவில் திருமணம் செய்து கொண்டார். சனாதன தர்ம முறைப்படி திருமணம் நடந்தது.

திருமணத்தில் உள்ளூர்வாசிகள் கலந்து கொண்டு  அனைத்து பழக்கவழக்கங்களையும் நடத்தினர் மற்றும் புதுமணத் தம்பதிகள் முன்  ஹிமாச்சல நாட்டுப்புற இசைக்கு  நடனமாடினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *