மாணவர்களை கொண்டு நாற்காலி பாலம் அமைத்து நடந்த ஆசிரியர்  சஸ்பெண்ட்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து உள்ளது. இதையடுத்து அங்குள்ள பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், அங்குள்ள பள்ளி ஒன்றில் அதன் வளாகம் மைதானம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், பள்ளிக்கு நுழைய முற்படும் போது மழை நீரில் கால்கள் படக்கூடாது என்பதற்காக, அங்கு படிக்கும் மாணவர்களை கொண்டு பள்ளியில் உள்ள நாற்காலிகளை வாசலில் இருந்து வகுப்பறை வரிசையாக பாலம் போல அடுக்கி வைக்க சொல்லியுள்ளார். பின்னர் அந்த நாற்காலி மீது ஏறி ஒவ்வொரு நாற்காலியாக தாண்டி வகுப்பறைக்குள் கால் நனையாமல் செல்கிறார்.

ஆசிரியை கீழே விழாமல் இருக்க பள்ளி மாணவர்கள் முழங்கால் வரை நீரில் நின்று நாற்காலியையும் ஆசிரியையும் பிடித்துக் கொள்கிறார்கள். இந்த சம்பவத்தை உடன் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பெரும் ஆசிரியர் செயலுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *