செஸ் ஒலிம்பியாட்: சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

மத்திய-மாநில உளவு பிரிவு போலீசார், உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு படை என 22 ஆயிரம் போலீசாரைக் கொண்டு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இரு நாட்களும் சென்னையில் டிரோன்கள், ஹைட்ரஜன் பலூன்கள் போன்றவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் மோடி பயணிக்க உள்ள வழித்தடங்களில் உள்ள உயரமான கட்டிடங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இன்று நண்பகல் முதல் இரவு 9 மணி வரை ராஜா முத்தையா சாலை, ஈ.வே.ரா பெரியார் சாலை, அண்ணாசாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், இந்த சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கம் சாலையில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று காலை முதல் உணவகங்கள், பேக்கரி, செல்போன், காவல் துறை விற்பனை கடைகள், பேன்ஸ் ஸ்டோர் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் இன்று காலை முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது.

பெரியமேடு இராஜா முத்தையா சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்படுகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழா நடைபெறுவதால் அனைத்து கடைகளும் இன்று காலை முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சி துவங்கும் நேரத்தில் இந்த சாலையில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *