உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி: வெள்ளி பதக்கத்தை வென்ற நீரஜ் சோப்ரா 

அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிபதக்கத்தை வென்றுள்ளார்.டோக்கியோ ஒலிம்பிக் வீரரான நீரஜ் சோப்ரா, வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் மற்றும் முதல் ஆண் தடகள வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.

இதற்கு முன்பாக கடந்த 2003-ம் ஆண்டு பாரிஸ் நாட்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில், அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கல பதக்கத்தை வென்றிருந்தார்.

இன்று நடைபெற்ற போட்டியில் முதல் சுற்றின் போது “பவுல்” செய்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய நீரஜ் சோப்ரா, இரண்டாவது சுற்றின் போது 82.39 மீ தூரம் ஈட்டி எறிந்தார். பின்னர் 3 வது சுற்றின் போது 86.37மீ தூரமும், 4வது சுற்றின் போது 88.13மீ தூரமும் எறிந்து சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் மற்றொரு இந்திய வீரரான ரோஹித் யாதவ் 78.72 மீ, 78.05 மீ மற்றும் 77.95 மீ தூரம் எறிந்து 10வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *