மக்களே உஷார்!! கேரளாவில் பரவும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்..
வட மாநிலங்களில் பரவி வந்த ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் நோய் தற்போது கேரளாவில் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள 2 வளர்ப்பு பன்றி பண்ணைகளில் கடந்த வாரம் 5 பன்றிகள் உயிரிழந்துவிட்டனர். சந்தேகத்தின் அடிப்படையில் இறந்த பன்றிகளின் உடல் உறுப்புகளை சேகரித்த கால்நடைத்துறை மருத்துவர்கள் அவற்றை சோதனைக்காக போபாலில் உள்ள பன்றிக்காய்ச்சல் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே பன்றிக்காய்ச்சல் எதிரொலியாக பன்றிகள் உயிரிழந்திருப்பதாக போபாலில் உள்ள ஆய்வகம் தெரிவித்தது. இதனையடுத்து அதிகாரிகள் பன்றிகாய்ச்சல் பண்ணைகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர். பன்றிக் காய்ச்சலை தடுத்து நிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூறியுள்ளனர்.
இதனிடையே பண்ணைகளில் இருக்கும் 300 பன்றிகளை கொன்றுவிட உத்தரவு பிறப்பித்துள்ளனர். பன்றிகள் மூலம் மனிதர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவு ஏற்படாத போதிலும் மற்ற பன்றிகளால் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.