விரைவில் விற்பனைக்கு வரும் கோமியம்..!! சத்தீஸ்கர் அரசு அதிரடி..!!

பசு கோமியத்தை லிட்டர் ரூ.4 க்கு வாங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று சத்தீஸ்கர் மாநிலம்  அறிவித்துள்ளது. சத்தீஸ்கரில் கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கோமியத்தை கொள்முதல் செய்வதாக சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இது போன்ற பல்வேறு திட்டங்களை அம் மாநில அரசுகள் செய்து வருகின்றனர்.

சமீபத்தில்  மாட்டு சாணத்தில் ஏற்றுமதி செய்ய போவதாக  முதல்வர் பூபேஷ் பாகெல் கூறியிருந்தார். இவ்வாறு செய்வதன் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, கால்நடை வளர்ப்போர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உதவும் என்றார். 

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் கோதன் நியாய் யோஜனா திட்டம் 2 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு  மாட்டு சாணமும் வழங்கப்பட்டு வருகிறது. இப்போது பசு கோமியத்தில் பணம் கொடுக்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்ய அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பாக தொழில்நுட்ப குழு அதிகாரிகளுடன் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது சாணத்தை இயற்கை உரமாக மாற்றி, கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சிக்கு திட்டமிடப்பட்டது. கோமியம் லிட்டர் ரூ.4 வரை தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *