எரிபொருள் தட்டுப்பாடு: மிதிவண்டிக்கு மாறிய இலங்கை மக்கள்..!!

இலங்கையில் நிலவும் பொருளாதார  நெருக்கடி காரணமாக அங்கு எரிபொருள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எரிபொருள்களுக்கு மாற்று சக்தியாக மிதிவண்டிகளை வாங்க கடைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்.

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இலங்கையின் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 550-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இருப்பினும், தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மாற்றாக  மிதிவண்டிகள் மற்றும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இலங்கையில் உள்ள மிதிவண்டி கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

இதுகுறித்து மக்கள் தெரிவிக்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மிதிவண்டிக்கு தேவை அதிகரித்துள்ளது. விலை உயர்வு காரணமாக பெட்ரோல் வாங்க முடியவில்லை என  கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *