இனி வரும் காலத்தில் இந்தியாவில் பெட்ரோல் தேவை இருக்காது – நிதின் கட்கரி
மகாராஷ்டிரா பல்கலைக்கழகத்தில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய போது இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.
இந்தியாவில் அதிகரித்து வரும் மின்சார வாகன பயன்பாடு, பெட்ரோல் – டீசல் பொருட்களின் எதிர்கால தேவை எப்படி இருக்கும் என்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.
அதில் இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களுக்கான தேவை இருக்காது. இதனைத்தொடர்ந்து நாட்டில் எரி பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
பெட்ரோல், டீசலுக்கு பதிலாக பயோ எத்தனால் பயன்படுத்தப்படும் என்று கூறினார். ஏற்கனவே மகாராஷ்டிராவின் விதர்பா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பயோ எத்தனால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் எதிர்காலத்தில் பயோ எத்தனால் பயன்படுத்தப்படும் என்று கூறினார்.
மேலும் சத்தீஸ்கர் மாநிலத்தை மின்சார வாகனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து உபகரணங்களுக்கான உற்பத்தி மையமாக மாற்றப்படும் என வாக்குறுதி அளித்தார்.