புதிய வசதியை அறிமுகம் செய்த ட்விட்டர் நிறுவனம்..!
ட்விட்டர் நிறுவனம் தற்போது கோ ட்வீட் (CoTweets) என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதி மூலம் இரண்டு பயனர்கள் ஒரு ட்வீட்டில் ஒத்துழைக்க அல்லது ஒரு பதிவை ஒன்றாக அல்லது ஒரே நேரத்தில் ட்வீட் செய்ய முடியும்.
கோ ட்வீட் (CoTweeting) ஒரு பயனர் ஒரு பதிவு ட்வீட் செய்த பிறகு இரண்டாவது ட்விட்டர் பயனரை இணை பயனர்களை இணைத்துக்கொள்ளலாம். அதற்கு இரண்டாவது பயனர் ட்வீட்டில் சேர்க்கப்படுவதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும். இந்த புதிய அம்சம் தற்போது அமெரிக்கா, கனடா மற்றும் கொரியா போன்ற சில நாடுகளில் உள்ள உள்ள சில பயனர்களுக்கு மட்டும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் மூலம் ட்விட்டரில் மக்கள் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது. இதன் மூலம் மேலும் புதிய பார்வையாளர்களை வளரவும் மற்றும் புதிய கணக்குகளுடனான அவர்களின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது முடியும் என தெரிவித்துள்ளது.
இந்த அம்சத்தை கொண்டு கோ ட்வீட் (CoTweets) ஐ ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சோதித்து வருகிறோம் தெரிவித்தன. வழக்கமான ட்விட்களைப் போலவே இந்த கோ ட்வீட் (CoTweets) உருவாக்கப்படலாம். அதற்கு மற்ற பயனர் உங்களைப் பின்தொட பொதுக் கணக்குக் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என குறிப்பிட்டனர். இந்த நேரத்தில் நீங்கள் மற்றொரு பயனருடன் மட்டுமே கோ ட்வீட் (CoTweet) செய்ய முடியும்.