தெலுங்கானாவில் சுரங்க பாதையில் சிக்கிய தனியார் பள்ளி மாணவர்களை காப்பாற்றிய மக்கள்..!!

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் மழைநீர் சாலையில் நிரம்பிய நிலையில்  முப்பது மாணவர்களை  ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி பேருந்து சுரங்கப்பாதையில் சிக்கி  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தெலுங்கானாவில் கடந்த  சில நாட்களாக பரவலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.  கனமழை காரணமாக சில மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகபூப்நகர் சாலை முழுவதும் மழைநீரால் நிரம்பியதால் தனியார் பள்ளி பேருந்து ஒன்று சுரங்க பாதையில் சிக்கியது.  இந்நிலையில் அந்த பஸ்சில் சிக்கியிருந்த முப்பது மாணவர்கள் வெளியில் வர முடியாமல் தவித்தனர். 

இதை கண்ட அங்கிருந்த மக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பள்ளி பேருந்தில் இருந்த குழந்தைகள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளனர். தெலுங்கானாவில் வரும் நாட்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சி அடைந்தனர். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *