நம்ம ரூட்டே தனி..!! முதலையை கரம் பிடித்த மெக்சிகோ மேயர்..!!
முதலையை முத்தமிட்டு கரம் பிடித்தார் மெக்சிகோவின் நகர மேயர்.இந்த மேயர் முதலை திருமணம் மத்திய மெக்சிகோவின் தென்மேற்கே இருக்கும் ஒரு சிறிய நகரம்தான் சான் பெட்ரோ ஹவுமெலுலா.
இந்நகரத்தின் மேயராக இருப்பவர் விக்டர் ஹியூகோ சோசா. இவர்தான் பாரம்பரிய முறைப்படி 7 வயதுடைய முதலையை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.
இந்தியாவில் கழுதை, தவளை போன்ற உயிரிணங்களுடன் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு போலத்தான் மெக்சிகோவின் இந்த நகரத்திலும் நடத்தப்பட்டிருக்கிறது. அதாவது மழை பெய்து வளம் செழிப்பதற்காக இந்த நிகழ்வு நடந்துள்ளது.
இந்த சடங்குகள் நூற்றாண்டுக்கு முந்தைய ஹிஸ்பானிக் காலத்தில் அக்ஸாவின் ஹுவேவ் மற்றும் சோண்டல் ஆகிய பழங்குடியின மக்கள் பின்பற்றி வந்தது என்பது குறிப்பித்தக்கது.
இந்த முதலைக்கு வெள்ளை நிற கவுன் உடுத்தப்பட்டு, பூ வைத்து அலங்கரிக்கப்பட்ட அந்த முதலையை கடவுளின் அம்சமாக கருதி அவருக்கு முத்தமிட்டு மணமுடித்துக் கொள்கிறார் இந்த மேயர்.இந்த திருமணத்துக்கு பிறகு அப்பகுதி மக்கள் முதலையை தோளில் சுமந்தபடி பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுச் சென்றிருக்கிறார்கள்.
இது தொடர்பாக பேசியுள்ள மேயர் விக்டர், இயற்கையிடம் மழை, உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை வேண்டி பிரார்த்தித்தும் இந்த சடங்கை செய்கிறோம். இது காலம் காலமாக நாங்கள் பின்பற்றிவரும் நம்பிக்கை என்கிறார்.இந்த வினோதமான செயல்கள், சம்பவங்கள் குறித்து வீடியோக்களுக்கு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது