அந்த மனசுதான் சார் கடவுள்..!!  திருடனுக்கு பிறந்தநாள் கொண்டாடிய  குடும்பம்..!!  

தனது பிறந்தநாளை கொண்டாட தனது நண்பர்களுடன் சேர்த்து திருட சென்ற போது பிறந்த நாள் நபருக்கு அவர் எதிர்பார்க்காத நிகழ்ச்சி நடந்துள்ளது. டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதி ஒன்றில் உள்ள வீட்டில், யாரும் இல்லாத சமயத்தில் மூன்று  மர்ம நபர்கள் திருட சென்றுள்ளனர்.

அப்போது திடீரென்று வீட்டில் இருந்த நபர்கள் திருடர்களை கண்டனர். இதனால் 3 திருடர்களும் பதறியடித்து தப்பிக்க முயன்ற போது, அதில் ஒரு திருடனை மட்டும் பிடித்து விசாரித்தனர். மாட்டியது சிறுவன் என்றதும் தொடர்ந்து விசாரித்த போது, கதறி அழுதுகொண்டே எனக்கு இன்று பிறந்தநாள். 

எனவே தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சி மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் எனக்கு சிறுவயதில் இருந்தே தந்தை இல்லை, எனது குடும்பம் மிகுந்த பண நெருக்கடியில் உள்ளது என்று தனது சோகக்கதையை அழுது புலம்பி உள்ளார்.இதைக் கேட்ட அந்த குடும்பத்தினர், தடாலடியாக ஒரு கேக்கை வரவழைத்தனர்.

அந்த கேக்கை அந்த திருடன் கையால் வெட்ட வைத்து  பிறந்த நாள் வாழ்த்து பாடலையும் பாடி மகிழ்ந்தனர். அந்த சிறு திருடன் முழித்து முழித்து பார்க்க உடனே சட்டென்று அருகிலிருந்த நபர் ஒருவர் அவருக்கு கேக்கை எடுத்து ஊட்டி விட்டார். இதையடுத்து அந்த திருடனை காவல்துறையில் ஒப்படைத்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகையில், அது குறித்து தேடினோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *