பானிபூரியால் வந்த புதிய சிக்கல்..!! பதறும் சுகாதாரத்துறை..!!
அரே பயா பானிபூரி கேன்செல், க்யோன் பயா நீங்க பண்ற வேலைக்கு இத சாப்பிட என காலரா வந்து காணாம தான் போகணும்..
ஆம், நேபாளம் காத்மாண்டு பகுதியில் பானிபூரி தடை செய்யப்பட்டுள்ளதாக நேபாள சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பானிபூரி பலரின் விருப்பமான உணவாக உள்ளது.
இந்நிலையில் நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டு பகுதியில் பானிபூரி தடைசெய்யப்பட்டுள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நேபாள சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், லலித்பூர் மெட்ரோபாலிடன் சிட்டியில் காலா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் காலரா பரவலுக்கு காரணம் பானிபூரியில் பயன்படுத்தப்படும் சுகாதாரமற்ற நீர் தான் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். பானிபூரியில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் காலரா பாக்டீரியா இருப்பதாக கூறியுள்ளனர்.
இதனால் காத்மாண்டு நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் பலரும் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், நடைபாதை பகுதிகளில் பானி பூரி விற்பனையை நிறுத்த பேரூராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இந்த தகவல் பானிபூரி பிரியர்களிடம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.