கறி விருந்துக்கு வந்த புது மாப்பிள்ளையை காவு வாங்கிய மாமனார்; திருமணமான 3 நாட்களில் அரங்கேறிய பயங்கரம்!

திருத்துறைப்பூண்டி அருகே கறி விருந்துக்கு சென்ற மருமகனை, வெட்டிக் கொலை செயத மாமனாரை போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வீரபுரம் பகுதியை சேர்ந்தவர் சிற்றரசு மகன் முத்தரசன் (23). இந்நிலையில் முத்தரசனுக்கு, திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் உள்ள மங்கலநாயகி புரத்தை சேர்ந்த அரவிந்தியாவிற்கும் கடந்த 5 நாள்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கடந்த ஜூன் 15 ஆம் தேதி மாமனார் வீட்டில் நடைபெற்ற விருந்தில், முத்தரசன் தனது மனைவியுடன் பங்கேற்று, அங்கேயே தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் புதுமாப்பிளை முத்தரசன் மாமனார் வீட்டின் அருகே ரத்தக் காயங்களுடன் சடலாக கிடந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

நிகழ்விடத்திற்கு சென்ற திருத்துறைப்பூண்டி போலீஸார் முத்தரசன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், முத்தரசன் அவரது மாமனார் ரவிச்சந்திரனை பலர் முன்னிலையில் எதிர்த்து பேசியுதாகவும், இதில் ஆத்திரமடைந்த அவர் மருமகன் முத்தரசனை வெட்டி கொலை செய்தது. தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் ரவிச்சந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *