100 வது பிறந்தநாளை கொண்டாடும் பிரதமர் மோடியின் தாயார்..!!!
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபாவின் 100வது பிறந்தநாளை ஒட்டி காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் தயார் ஹீராபாவை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபா மோடி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இதை முன்னிட்டு குஜராத் காந்திநகரில் உள்ள அவரது வீட்டில் தாய் ஹீராபெனை சந்தித்து உள்ளார். இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் மா.. இது வெறும் வார்த்தையல்ல, ஆனால் பலவிதமான உணர்வுகளின் தொகுப்பு இந்த சிறப்பான நாளில் மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் சில எண்ணங்களை எழுதியுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
இந்த நேரத்தில் தந்தை உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு கடந்த வாரம் தனது 100வது பிறந்தநாளை கொண்டாடியிருப்பார் என கூறினார். 2022 ஆம் ஆண்டு எனது தாயாரின் நூற்றாண்டு விழா தொடங்கும் ஒரு சிறப்பான ஆண்டாகும் என குறிப்பிட்டார்.
ஒரு நாள் பயணமாக குஜராத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி வதோதராவில் உள்ள பேரணியில் கலந்து கொள்கிறார். பின்னர் தாயாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் சொந்த ஊரான வட்நகரில் சமய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நாளில் ரேசன் பகுதியில் உள்ள 80 மீட்டர் நீள சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது