நிதி நிறுவனத்தின் பெயரை கெடுக்க வேண்டாம் – ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ்

கடன் வசூல் செய்யும் ஏஜெண்டுகள் மோசமாக நடந்து கொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில் ஏஜென்ட்கள் வங்கி அதிகாரிகள் போல் நாகரீகமாக பேசுவதில்லை.

அவர்கள் கடன் வாங்கியவர்களை கெட்ட வார்த்தையில் திட்டுவது போன்ற புகார்கள் தற்போது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடன் வாங்கியவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

கடனை வசூலிக்கும் ஏஜெண்டுகள் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி நிலையில் தற்போது ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரிசர்வ் வங்கி இறுக்கமாக இருந்திருந்தால் பொருளாதார பேரழிவு ஏற்பட்டிருக்கும்  – Money Haat News

இதனால் கடன் கொடுத்த நிதி நிறுவனத்திற்கு தான் கெட்ட பெயர் ஏற்படும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற புகார்கள் ரிசர்வ் வங்கிக்கு வரும்போது சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டிருந்தால் நாங்களே நேரடியாக கடும் நடவடிக்கை எடுப்போம்.

கடன் வாங்கியவர்களிடம் கடனை வசூல் செய்ய சட்டப்படியான நடவடிக்கைகளை மட்டுமே எடுக்க வேண்டும் என்றும், சட்டத்தை மீறி கந்து வட்டி வசூல் செய்பவர்கள் போல் அநாகரிகமாக நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *