கலகலப்பு கஃபே – பாலிடிக்ஸ் கார்னர்
“ஊருக்கெல்லாம் ஒரே சூரியன் தான்! ஊருக்கெல்லாம் ஒரே பாட்சா தான்!”
“என்ன சித்தப்பு நீயும் எடப்பாடி ஆளு தானா?”
“டேய் மொசக்குட்டி… இன்னைக்கு காலைல ஒரு சேனல்ல பாட்சா படம்
போட்டாங்கடா… அந்த பாட்டைத் தான் பாடுனேன்… அதுக்கு ஏன் என்னையப்
பார்த்து எடப்பாடியோட ஆளான்னு கேட்டுட்ட?”
“ஏன் சித்தப்பு… நான் என்ன அசிங்கமான வார்த்தையவா கேட்டுட்டேன்? இப்ப
அ.தி.மு.க.வுல பூகம்பமே ஒரே ஒரு தலைமையைக் கொண்டுவரணும்னு நடக்குற மோதல்
தான!”
“அட… இந்த விஷயம் தெரியாதேடா மொசக்குட்டி… திரும்பவும் ஓபிஎஸ்,
ஈபிஎஸ் சண்டை தொடங்கிடுச்சா?”
“தொடங்கிடுச்சாவா? கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் ஃபைட் மாதிரியே நடக்குது
சித்தப்பு… தெனமும் அதிமுக அலுவலகத்துல ரெண்டு அணியோட ஆதரவாளர்களும்
ஒண்ணுகூடி தீவிரமா ஆலோசனை நடத்திட்டு இருக்காங்க… இதுல இன்னைக்கு
ஈபிஎஸ் அணியோட ஆளு ஒருத்தருக்கு வாய் உடைஞ்சு ரத்தம் வர்ற மாதிரி
அடிச்சிருக்காங்க!”
“அதுசரி… ரத்தத்தின் ரத்தங்கள்னா ரத்தம் வரத்தான செய்யும் மொசக்குட்டி!
எப்டி இந்த பிரச்சனை தொடங்குச்சு?”
“ரெண்டு நாளைக்கு முன்ன அதிமுக மேல்மட்ட நிர்வாகிகள், மாவட்டச்
செயலாளர்கள் மீட்டிங் நடந்துச்சு சித்தப்பு… அந்த கூட்டத்துல
திட்டமிட்டபடி மாதவரம் மூர்த்தி, இனிமேல் அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமைதான்
சரிப்படும்… அப்போ தான் நம்மளால தீவிர அரசியல் செய்து மீண்டும்
ஆட்சிக்கு வரமுடியும்னு கொளுத்திப்போட, வரிசையா எடப்பாடி ஆதரவாளர்கள்,
ஒற்றைத்தலைமை வேண்டும்னு பேசியிருக்காங்க! அதை எதிர்பார்க்காத ஓபிஎஸ்
அப்டியே அப்செட் ஆயிட்டாராம்!”
“இப்டி கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்துறது ஓபிஎஸ் வாழ்க்கையில பல தடவை
நடந்திருக்கு மொசக்குட்டி! இதுக்கெல்லாமா வருத்தப்படுவாரு மனுஷன்?”
“நானும் அப்டித்தான் நெனச்சேன் சித்தப்பு… ஆனால் மனுஷன் ரோஷப்பட்டு
பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்திட்டாரு… அதுல பேசுறப்ப சைக்கிள்
கேப்புல நம்ம மோடியையும் கோர்த்து விட்டுட்டாரு!”
“மோடியை கோர்த்துவிட்டுட்டாரா? அதெப்படி மொசக்குட்டி?”
எடப்பாடியை முதல்வரா அறிவிச்சப்ப ஓபிஎஸ் அதை ஏத்துக்கல… உடனே மோடி
தலையிட்டு ஓபிஎஸ்ஸ கூல் பண்ணி, துணை முதல்வர் போஸ்ட்டிங்க ஓபிஎஸ்
ஏத்துக்குற மாதிரி பண்ணியிருக்காரு!”
“அட! ஐநா சபை வரைக்கும் போயி உலகத் தலைவர்களோட உரையாடுற ஒரு மனுஷனை,
லோக்கல் பஞ்சாயத்துல எல்லாம் இறக்கி விட்டுட்டாய்ங்களா?! அதுவும்,
இன்னொரு கட்சியோட உட்கட்சி விவகாரத்துல அவரு போயி அட்வைஸ்
குடுத்திருக்காரா?! பாவத்த!!”
“ஆமா சித்தப்பு… இப்டி ஓபிஎஸ் மோடியை கோர்த்து விட்டதுல பிஜேபி
குரூப்புக்கு செம்ம கடுப்பாம்! ஆனால், ஓபிஎஸ்ஸும் மோடியைத் திட்டமிட்டே
தான் கோர்த்துவிட்டிருக்காராம்! அப்பத்தான் இனிமேல் எடப்பாடிக்கு
சப்போர்ட்டா மோடி இந்த விவகாரத்துல தலையிட மாட்டாருன்னு ஓபிஎஸ்
நினைச்சாராம்!”
“அது போகட்டும், நம்மூர்ல அதிமுக தலைவர்கள் அடிச்சுக்கறது எப்படும்
நடக்குறது தான? வட நாடுகள்ல இளைஞர்கள் ரயில் வண்டிகளைக் கொளுத்திக்கிட்டு
இருக்காங்களே… என்ன விஷயம் மொசக்குட்டி?”
“மோடி தேர்தல் பிரச்சாரத்துல பேசுனால் வழக்கமா எப்டி பேசுவாரு சித்தப்பு?”
“அதான் உலகம் அறிஞ்ச விஷயமாச்சே! நம் இந்திய எல்லைப்பகுதியில் ராணுவ
வீரர்கள் பனியிலும், குளிரிலும் நடுங்கிக்கொண்டு நம்மைக் காப்பதற்காகப்
போராடுகிறார்கள் என்று உணர்வுப்பூர்வமாகப் பேசுவார். அவர் பேசுறதைக்
கேட்டு வட இந்தியாக்காரனுங்க அம்புட்டு பேரும் புல்லரிச்சுப் போயிட்டு
அவருக்கே மொத்த ஓட்டையும் போட்டுட்டு வந்தாங்க!”
“வங்தாங்கள்ல சித்தப்பு? இப்போ அதுல தான் பெருத்த ஓட்டை விழுந்திருக்கு!
மோடி பெருமையா பேசுற ராணுவத்துலயே ஆள் எடுக்குறதுல நிறைய மாற்றங்களை மோடி
அரசு அறிவிச்சிருக்கு. இனிமேல் ராணுவ வீரர்களை நிரந்தரமாக எடுக்க
மாட்டாங்களாம்… நாலு வருஷத்துக்கு ஒரு முறை ஒப்பந்த அடிப்படையில்தான்
செலக்சன் பண்ணுவாங்களாம்… அதுக்கப்புறம் ராணுவத்துலருந்து
கழட்டிவிட்டுடுவாங்களாம்!”
“அடக்கொடுமையே… நாலேநாலு வருஷம் மட்டும் குடுக்குறதுக்கு இது என்ன
இஞ்சினியரிங் கோர்ஸா? நாலு வருஷம் மட்டும் ராணுவத்துல வச்சுக்கிட்டு
அப்புறமா தூக்கித் தூர எறியிறதுக்கு எதுக்கு ராணுவத்துக்கு ஆள்
எடுக்கணும் மொசக்குட்டி?”
“இப்ப இருக்குற அக்னிபத் திட்டப்படி, இதில் செலக்ட் பண்ற அக்னி
வீரர்களுக்கு, ஓய்வூதியம் கிடையாது… மருத்துவக்காட்பீடு கிடையாது…
சம்பளம்கூட எதிர்பார்த்த அளவுக்குக் கிடையாது!”
“பின்ன இப்டியெல்லாம் கஷ்டப்படுத்துனா அவங்க எப்படி தேச பக்தியோட
ராணுவத்துல இந்தியாவுக்காக போர் செய்வாங்களாம்?”
“அதைச் சொல்லிச்சொல்லித்தான் இப்ப ரயில் நிலையங்களைக் குறிவச்சு தீவைக்கிறாய்ங்க!”
“அப்போ இவங்கள ‘அக்னி வீரர்கள்’னு சொல்றது ஒருவகையில் சரியாத்தான இருக்கு
மொசக்குட்டி! ஹஹஹ!”
- புத்தன்