பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: ஒன்றிய அரசு விளக்கம்!
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல்களின் தேவை அதிகரித்துள்ளதால் உள்ளூர் மட்டத்தில் வினியோக சிக்கல் ஏற்பட காரணம் என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கடந்த சில நாட்களாக நாட்டின் பல பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தாமதம் ஏற்பட்டு வாடிக்கையாளர்களின் காத்திருப்பு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.
இந்நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் தேவையின் அளவு அதிகரித்துள்ளதால் உள்ளூர் மட்டத்தில் சிக்கல்கள் உருவாகியுள்ளதாகவும் இந்த தட்டுப்பாட்டைப் போக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருவதாக ஒன்றிய அரசு விளக்கம் அழித்துள்ளது.
குறிப்பாக கடந்த ஆண்டு இதே ஜூன் மாதத்தில் கடந்த ஆண்டு தேவைப்பட்ட எரிபொருள் விலையை விட கூடுதலாக 50% தேவை ஏற்பட்டதாக கூறியுள்ளது. ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் இந்த பெட்ரோல், டீசல் விலையை போதுமான அளவு பூர்த்தி செய்கிறது என்பது குறித்து ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், கலால் வரி குறைப்பால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக பங்க் உரிமையாளர்கள் குற்றம் சாட்டுவது குறிப்பிடத்தக்கது.