இது என்ன குஷ்புவுக்கு வந்த சோதனை… ட்விட்டர் கணக்குகள் முடக்கம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. அரசியலில் கால் பதித்தாலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருபவர். அதன்படி, தீபாவளிக்கு வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
குஷ்பு சமூக வலைதளங்களில் ஆட்சிவாக இருப்பவர். தமிழகத்தில் நிலவும் அரசியல் பிரச்சனைகளுக்கானத் தனது கருத்துகளை ட்விட்டர் மூலம் வெளிப்படுத்துவார். அப்படி இவர் கூறும் சில கருத்துகள் சர்ச்சையாவதும் உண்டு.
இந்நிலையில், இன்று இவரது ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் முடக்கியுள்ளனர். இதுவரை அவர் போட்ட அனைத்து பதிவுகளையும் நீக்கியதுடன் முகப்பு படமும் மாற்றப்பட்டுள்ளது. மேலும், பெயரையும் BRIANN என்று மாற்றியுள்ளனர். இது குறித்து, குஷ்பு தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.