அச்சுறுத்தும் உருமாறிய டெல்டா வகை கொரோனா… எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று முதல் அலை, இரண்டாம் அலை என வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடிய நிலையில், தற்போது தான் அதன் பாதிப்பு மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது.

மூன்றாவது அலை தாக்கமும் அதிகமாக இருக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், உலகம் முழுவதும் 111 நாடுகளில் உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை டெல்டா, ஆல்பா ,பீட்டா, காமா என நான்கு உருமாறி வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதும் 178 நாடுகளில் ஆல்பா வைரஸ் பரவி உள்ள நிலையில் பீட்டா வைரஸ் 123 நாடுகளிலும் பீட்டா வைரஸ் 75 நாடுகளில் பரவியுள்ளது.

மேலும், உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் தான் மிக விரைவில் பரவும் ஆற்றல் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பல நாடுகளுக்கு நெருக்கடி ஏற்படும் என்றும் தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்டுள்ள நாடுகளில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இன்னும் பல நாடுகளில் நோய் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை வசதிகளும் குறைவாக இருப்பதால் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *