ஓலா நிறுவனம் அதிரடி அறிவிப்பு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை தொடர்ந்து வருகின்ற 2024-ம் ஆண்டிற்குள் எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில் ஓலா நிறுவனம் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் உலகிலேயே மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு மையம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமையவுள்ளது.
ஓலா நிறுவன அதிகாரி பவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்தியில் 2024-ம் ஆண்டிற்குள் ஓலா எலக்ட்ரிக் கார்களின் மாடல்கள் வெளிவர இருப்பதாக தெரிவித்துள்ளது. அதே போல் 2024 முதல் 2026 வரையில் வருடத்திற்கு 10 லட்சம் கார்கள் தயாரிக்க இலக்கு கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் ஓலா எலக்ட்ரிக் கார்கள் 4 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தில் செல்லும் என்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் ரூ.500 கி.மீ தூரம் வரையில் செல்லும் என கூறியுள்ளார். மேலும், எலக்ட்ரிக் கார்கள் உருவாக்க 1000 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதோடு லித்தியம், அயன் பேட்டரியை இந்தியாவிலேயே தொடங்க ஓலா நிறுவனம் முடிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அதிகப்படியான எரிப்பொருட்களை சேமிக்க முடியும் என கூறியுள்ளது.