5 ஜி ஏலம்! 7-வது நாளாக இன்று தொடக்கம்..

இணைய சேவையில் புதிய புரட்சி என அழைக்கப்படும் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடும் பணி நாளை நடைபெறுகிறது.

கடந்த பட்ஜெட் தாக்கலின் போது 5ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இவதற்கான ஏலத்தை ஜூலை மாதத்தில் நடித்தி முடிக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை டெட்ராய் மேற்கொண்டுள்ளது.

தற்போது 72 ஆயிரத்து 97.85 மெகா ஹிட்ஸ் அலைகற்றை மூலம் 4.5 லட்சம் கோடி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலத்தின் மொத்த காலம் 20 ஆண்டுகள் ஆகும். 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்க அதானி குழுமத்தை சேர்ந்த அதானி டேட்டா நெட்வொர்க்ஸ், ஜியோ, ஏர்டல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ளன.

குறைந்த அளவில் நிறுவனங்கள் விண்ணப்பித்து இருப்பதால் ஏலத்தில் போட்டி என்பது பெரிய அளவில் இருக்காது என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜியோ, ஏர்டல், வோடபோன் போன்ற நிறுவனங்களுக்கு அதிகப்பட்ச பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் 5 ஜி ஏலமானது தொடர்ந்து 7-வது நாளாக நடைப்பெற்று வருகிறது. குறிப்பாக இன்றைய தினத்தில் அதிகமாக அரசுக்கு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *