கன்னடருக்கு இங்கு என்ன வேலை… அண்ணாமலையை வறுத்தெடுத்த இளைஞர்

தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட அண்ணாமலை பாஜகவில் இணைவதற்கு முன்னர் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் தான் அரசியல் ஆர்வம் ஏற்பட்டு தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார்.

தனது பதிவியை ராஜினாமா செய்த பின்னர் நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில் பேசிய அண்ணாமலை, “ நான் பிறந்தது வேண்டுமானால் வேறு இடமாக இருக்கலாம். ஆனால், என்றும் நான் கன்னடன் தான்” என்று பேசியிருந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

தமிழ்நாடு மாநிலத் தலைவராக அண்ணாமலை நாளை(16.7.2021) பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணாமலை உரையாற்றிக் கொண்டிருக்கையில் அங்கு வந்த இளைஞர் ஒருவர், “ அப்போது கன்னடர் என்று கூறி விட்டு இங்கு என்ன செய்கிறீர்கள்” என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டதால் அந்த இளைஞரை அக்கட்சியினர் அங்கிருந்து இழுத்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…