நிறத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகள் தீடிரென தீப்பிடித்து எரிந்து நாசம்

நாமக்கல்லில் நிறத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகள் தீடிரென தீப்பிடித்து எரிந்து நாசம். நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்.

நாமக்கல் அடுத்த முதலைப்பட்டியில் தனியார் டயர் விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் வளாகம் அருகே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில டிரைவர்கள் லாரிகளை நிறுத்திவிட்டு சொந்த ஊருக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நள்ளிரவு 1.30 மணியளவில் அங்கிருந்த ஒரு டேங்கர் லாரி உள்பட 3 லாரிகளில் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த நாமக்கல், ராசிபுரம் , திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் ஒரு லாரியில் இருந்த ஜவுளிகள் உள்பட மொத்தம் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *