அதிமுக கொடிக்கம்பத்திற்கு வெள்ளை நிற பெயிண்ட் அடித்த ஒபிஎஸ் அணியினர்

அதிமுக மற்றும் ஓபிஎஸ் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை மதித்து அதிமுக கொடிக்கம்பங்களை அகற்றி அதிமுக அடையாளங்களை வெள்ளை நிற பெயிண்டால் அழித்த ஓபிஎஸ் அணியினர் நெல்லை மாவட்டம் இட்ட மொழியில் பரபரப்பு

அதிமுக மற்றும் ஓபிஎஸ் விவகாரத்தில் ஓபிஎஸ் அணியினர் அதிமுகவின் சின்னங்களையோ கொடிகளையோ அதிமுக கொடியின் அடையாள  வண்ணங்களையோ பயன்படுத்தக் கூடாது என.நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை மதிக்கும் வகையிலும் ஓபிஎஸ் க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நெல்லை மாவட்டம் இட்ட மொழியில் ஓபிஎஸ் அணியின் மாநில செய்தி தொடர்பாளர் டென்சிங் ஸ்வாமிதாஸ் தலைமையில் இட்ட மொழி சந்திப்பில் திரண்ட தொண்டர்கள் அங்கிருந்த அதிமுக கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படம் இருந்த அதிமுக கொடியின் வண்ணத்தையும் இரட்டை இலை சின்னத்தையும் வெள்ளை நிற பெயிண்டால் அழித்தனர். 

பின்னர் அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மாநில செய்தி தொடர்பாளர் டென்சிங் சுவாமி தாஸ் தலைமையில் ஓபிஎஸ் வாழ்க என  கோஷமிட்டனர். டென்சிங் ஸ்வாமிதாஸ் மீது திசையன்விளை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *